தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறையில் பயிர்களைத் தாக்கும் குருத்துப்பூச்சி, இலை சுருட்டுப்பூச்சிகளால் விவசாயிகள் கலக்கம்!

By

Published : Jul 17, 2022, 10:20 PM IST

Updated : Jul 17, 2022, 11:02 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் குருத்துப்பூச்சி, இலை சுருட்டுப் பூச்சியின் தாக்குதலில் இருந்து குறுவை பயிர்களைக் காக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

வசாயிகள் கவலை
வசாயிகள் கவலை

மயிலாடுதுறைமாவட்டத்தில் நடப்பாண்டு 96 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட குறுவை சாகுபடியைத் தாக்கும் குருத்துப்பூச்சி, இலை சுருட்டுப் பூச்சிகளை அழித்து பயிர்களை பாதுகாக்கும் விதமாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் இன்று (ஜூலை17) விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய வட்டங்களில் விவசாயிகள் பம்புசெட் மற்றும் ஆற்று நீர் பாசனத்தைக்கொண்டும் குறுவை சாகுபடி பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். நடவுப்பணிகள் முடிவடைந்து நாற்றுகள் இளம் பயிர்களாக கதிர் பிடிக்கும் நிலையில் உள்ள பயிர்களில் தற்போது குருத்துப்பூச்சி, இலை சுருட்டுப்பூச்சி, நாற்றங்கால் பூச்சி, பச்சை பூச்சித்தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த பூச்சிகள் இலைகளை சுரண்டி சாற்றை உறிஞ்சுகிறது.

இதனால், பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி நுனி சுருண்டு வாடிவிடுகிறது. இந்தப் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தினை தண்ணீரில் கலந்து, ஸ்பிரேயர் மூலம் வயல்களில் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பூச்சி தாக்குதலால் மகசூல் குறையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு உள்ளதாகவும் அரசு மானியத்தில் வழங்கக்கூடிய யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்களை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள்

இதையும் படிங்க: கொடைக்கானலில் கனமழையால் பீன்ஸ் சாகுபடி பாதிப்பு; உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

Last Updated :Jul 17, 2022, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details