மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் எவ்வித அசம்பாவிதங்கள் இன்றி பாதுகாப்பாக நடந்திடவும், சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும் மத்திய அரசின் இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
உதவி கமாண்டர் படைத்தளபதி அமித் திவேதி தலைமையில் 91 பாதுகாப்பு படை வீரர்கள் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரிக்கு இன்று வரவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.