தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஐடிபிபி வீரர்கள் 91 பேர் வருகை!

By

Published : Mar 1, 2021, 8:02 AM IST

நாகப்பட்டினம்: சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஐடிபிபி (இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை) வீரர்கள் 91 பேர் வருகைபுரிந்துள்ளனர்.

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வருகை
எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வருகை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் எவ்வித அசம்பாவிதங்கள் இன்றி பாதுகாப்பாக நடந்திடவும், சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும் மத்திய அரசின் இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வருகை

உதவி கமாண்டர் படைத்தளபதி அமித் திவேதி தலைமையில் 91 பாதுகாப்பு படை வீரர்கள் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரிக்கு இன்று வரவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், மூன்று சட்டப்பேரவை தொகுதியிலும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி முறையாக தேர்தல் நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வாக்காளர் விழிப்புணர்வு, பயிற்சிக்காக வெளியே எடுக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

ABOUT THE AUTHOR

...view details