தமிழ்நாடு

tamil nadu

இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மீனவர்கள்..

By

Published : Feb 25, 2022, 2:05 PM IST

Updated : Feb 25, 2022, 2:18 PM IST

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, காரைக்காலை சேர்ந்த 22 தமிழ்நாடு மீனவர்களை இலங்கைகடற்படையினர் கைது செய்து படகுகள் மற்றும் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மீண்டும் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள்..
மீண்டும் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள்..

நாகப்பட்டினம்:நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் சேவாபாரதியை சேர்ந்தவர் சிவா. இவருக்குச் சொந்தமான விசைப்படகில் நாகை துறைமுகத்திலிருந்து கடந்த புதன் (பிப்ரவரி 23) காலை 9 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அங்கு இருந்த மீனவர்களைச் சிறை பிடித்தனர்.

நாகை கீச்சாங்குப்பம் சேவா பாரதியைச் சேர்ந்த சின்னதுரை (60), சிவபாரதி ( 27 ),சௌந்தர்ராஜன் (34 ),உள்ளிட்ட 9 மீனவர்களை படகுடன் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மீனவர்களுக்கு முதல் கட்டமாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளனர். பின்னர் மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். அதே போல் காரைக்கால் துறைமுகத்திலிருந்து சென்ற 13 மீனவர்கள் என மொத்தம் 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மீனவர்கள்..

இதையும் படிங்க:மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

Last Updated :Feb 25, 2022, 2:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details