தமிழ்நாடு

tamil nadu

பழிக்குப்பழியாக இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை

By

Published : Jan 19, 2020, 9:24 AM IST

மதுரை: பழிக்குப்பழியாக இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder

மதுரை மாவட்டம் ஆனையூர் எஸ்விபி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (28). இவர் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதூர் ஆலங்குளம் தனியார் எண்ணெய் மில் அருகில் உதயகுமார் சென்றபோது முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர்கள் ஓட ஓட அவரை விரட்டி வெட்டிக்கொலை செய்தனர்.

இதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உதயகுமார் உயிரிழந்தார். அவரைக் கொலைசெய்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடல்புதூர் காவல் துறையினர், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

ராஜிவ் கொலை வழக்கு: பரோலில் வந்த ரவிச்சந்திரன் திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம்

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், உதயகுமார், பிளேடு பாண்டி என்பவருடைய நண்பரைப் படுகொலை செய்ததாகவும் அதற்கு பழிக்குப்பழியாக இந்தப் படுகொலை சம்பவம் நடந்திருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Intro:பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை - பெரும் பரபரப்பு

நண்பரைக் கொன்றதால் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுBody:பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை - பெரும் பரபரப்பு

நண்பரைக் கொன்றதால் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆனையூர் எஸ் வி பி நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் வயது 28 இவர் மீது 3 கொலை வழக்கு நிலுவையில் உள்ளது இந்த நிலையில் புதுர் S ஆலங்குளம் தனியார் எண்ணெய் மில் அருகில் உதயகுமார் சென்று கொண்டிருந்த பொழுது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் ஓட ஓட அவரை விரட்டி படுகொலை செய்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உதயகுமார் உயிரிழந்தார் கொலை செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர் அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவம் அறிந்த கூடல்புதூர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பொழுது உதயகுமார் பிளேடு பாண்டி என்பவருடைய நண்பரை படுகொலை செய்ததாகவும் அதற்கு பழிக்கு பழியாக இந்த படுகொலை நடந்திருப்பதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது இதனால் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் பட்டப்பகலில் நடந்த இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details