தமிழ்நாடு

tamil nadu

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: ராமேஸ்வரம்-வாரணாசி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

By

Published : Nov 16, 2022, 10:42 AM IST

காசியில் நடைபெற உள்ள தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக ராமேஸ்வரம்-வாரணாசி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Kasi special train  Kasi special train tamil sangamam  special train tamil sangamam  tamil sangamam  special train  train  Southern Railway  additional coaches  Rameswaram to Varanasi train  Kashi  காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி  தமிழ் சங்கமம்  தமிழ் சங்கமம் நிகழ்ச்சி  ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு  ரயிலில் கூடுதல் பெட்டிகள்  தெற்கு ரயில்வே  பழங்கால நூல்கள்  இசை நடனம்  ஆயுர்வேதம்  யோகா  கைவினைப் பொருட்கள்  நவீன கண்டுபிடிப்புகள்  வர்த்தகம்  கைத்தறி  ஆன்மீகம்  உணவு வகைகள்  தமிழ்நாட்டின் கலை  கலாச்சாரம்  மாணவர்கள்  மாணவர்கள்  இலக்கியவாதிகள்  நாட்டுப்புற கலை  பொய்க்கால் குதிரை  தமிழ் நாட்டுப்புற நடனங்கள்  கருத்தரங்குகள்  தப்பாட்டம்  பொம்மலாட்டம்  சிலம்பாட்டம்  காவடி ஆட்டம்  கரகம்  பரதநாட்டியம்  கர்நாடக இசை  தமிழ் இசை  நாதஸ்வர கச்சேரி  தேவாரம்  கைவினைஞர்கள்  ரயில்
ரயிலில் கூடுதல் பெட்டிகள்

மதுரை: காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 வரை காசியில் நடைபெற இருக்கிறது.

இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்கு, விவாதம், விரிவுரை போன்றவை இந்த சங்கமத்தில் நடைபெற இருக்கின்றன.

தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரம், உணவு வகைகள், கைத்தறி கைவினை பொருட்கள் ஆகியவை அடங்கிய பொருட்காட்சி நடைபெற இருக்கிறது. பரதநாட்டியம், கர்நாடக இசை தமிழ் இசை, தமிழ் நாட்டுப்புற இசை, நாதஸ்வர கச்சேரி, தேவாரம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

தமிழிசை வடிவில் திருவாசகம், கம்பராமாயண உரை, வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், சிலம்பாட்டம், காவடி ஆட்டம், கரகம், பட்டிமன்றம், தமிழ் நாட்டுப்புற நடனங்கள், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் போன்றவை காசியில் உள்ள மக்கள் ரசிப்பதற்காக அரங்கேற்றப்பட இருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், இலக்கியவாதிகள், இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலை, யோகா, ஆயுர்வேதம் சார்ந்த கலாச்சார வல்லுநர்கள், தொழில் முனைவோர், தங்கும் விடுதி உரிமையாளர்கள், கைவினைஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வலைப்பதிவர்கள் கலந்துக்கொள்ள இருக்கிறார்கள். இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து கலைஞர்கள் காசிக்கு செல்ல இருக்கிறார்கள்

அவர்களின் வசதிக்காக நவம்பர் 16, 23, 30 டிசம்பர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் - பனாரஸ் விரைவு ரயிலில் (22535) 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன. மறு மார்க்கத்தில் நவம்பர் 27 டிசம்பர் 4, 11 மற்றும் 18 ஆகிய நாட்களில் பனாரஸ் - ராமேஸ்வரம் விரைவு ரயிலில் (22536) 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன.

இதே போல சென்னை, கோயம்புத்தூர் கலைஞர்களின் வசதிக்காக எர்ணாகுளம் - பாட்னா விரைவு ரயில், டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கயா விரைவு ரயில், பாடலிபுத்திரம் - பெங்களூர் விரைவு ரயில் ஆகியவற்றில் முறையே 3 குளிர்சாதன மூன்றெழுத்து படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திருக்கார்த்திகை தீபதிருவிழா...அமைச்சர் சேகர்பாபு, எவ.வேலு ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details