தமிழ்நாடு

tamil nadu

பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து ரத்து!

By

Published : Dec 30, 2022, 3:27 PM IST

பாம்பன் ரயில் பாலத்தில் ஜனவரி 10 வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து ரத்து
பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து ரத்து

மதுரை:பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, முன்னதாக டிசம்பர் 30ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு ஜனவரி 10ஆம் தேதி வரை போக்குவரத்து ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

வழக்கத்துக்கு மாறாக பாம்பன் ரயில் பாலத்தில் எச்சரிக்கை மணியோசை ஒலித்ததால் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி வல்லுநர்கள் காலி ரயில் பெட்டி தொடர்களை பாம்பன் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவுகள் லக்னோ ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது.

ஆகையால், மேலும் பராமரிப்பு பணிகளை தொடரும் வகையில், ஜனவரி 10ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: Happy New Year: புத்தாண்டுக்கு தயாராகும் ஹோட்டல்களின் பலே திட்டங்கள்

ABOUT THE AUTHOR

...view details