தமிழ்நாடு

tamil nadu

மதுரையில் திடீர் கனமழை: சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

By

Published : May 29, 2020, 3:51 PM IST

மதுரை: அக்னி நட்சத்திரம் நேற்று (மே 28) முடிவடைந்த நிலையில், மதுரையில் திடீரென பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மதுரை செய்திகள்  மதுரை  madurai news  madurai sudden rain  மதுரையில் திடீர் மழை  மதுரை மழை  அக்னி நட்சத்திரம்
மதுரையில் திடீர் கனமழை:சாலையில் வெள்ளமென ஓடிய மழைநீர்

அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மதுரையில் மாலை நான்கு மணியளவில் கனமழை பெய்தது. பலத்த காற்று, மின்னல், இடியுடன் பெய்த மழை ஒட்டுமொத்த மதுரையையும் பதம்பார்த்துவிட்டது. அக்னி நட்சித்திரம் முடிந்தது என மதுரை மக்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில், இந்தப் பேய்மழை மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது.

பலத்த காற்றுடன் வீசிய இம்மழையால், ஆரப்பாளையம், பொன்மேனி, மாடக்குளம், அண்ணாநகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மரங்கள் முறிந்து விழுந்தன. ஸ்மார்ட் திட்டப் பணிகளுக்காக மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றிலும் தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் மழை நீர் நிரம்பி, பள்ளம் எது சாலை எது எனத் தெரியாத அளவிற்கு மழைநீர் ஓடிக்கொண்டிருந்தது.

மதுரையில் திடீர் கனமழை:சாலையில் வெள்ளமென ஓடிய மழைநீர்

தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் வெள்ளம்போல் காட்சியளித்தது. இதன் காரணமாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் இருளில் தவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கனமழைக்கு முறிந்து விழுந்த மரம்

மாநகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புத் துறையினர் போர்க்கால அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மேற்கொண்ட சீரமைப்புப் பணிகள் காரணமாக போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டதுடன், மின்சாரமும் சீர் செய்யப்பட்டது.

இடியுடன் பெய்த இந்த கனமழையின் போது மதிச்சியம் பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. மேலும், அம்மன் கோயில் எதிரே உள்ள ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையும் படிங்க:மீனாட்சி கோயில் அருகே துணிக்கடையில் தீ விபத்து

ABOUT THE AUTHOR

...view details