மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ரேவதி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த நிலையில் இவருடைய உறவுக்கார பையன் ஈஸ்வரன் என்பவர் ரேவதியை நீண்ட நாட்களாக ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ரேவதி வீட்டில் இருந்தபோது ஈஸ்வரன் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தி வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனையடுத்து, இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவி ரேவதியை சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாகக் குத்தி கொலை செய்துவிட்டு ஈஸ்வரன் தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த உசிலம்பட்டி காவல்துறையினர் ஈஸ்வரனை கைது செய்தனர்.