தமிழ்நாடு

tamil nadu

ஆடல், பாடல் குறித்த புதிய மனுக்களை விசாரிக்க தேவை இல்லை - மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து

By

Published : Jun 2, 2023, 7:04 AM IST

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கான அனுமதி கோரலில் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பே போதுமானது என்றும், புதிய மனுக்களை விசாரிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆடல், பாடல் நிகழ்வு குறித்த புதிய மனுக்களை விசாரிக்க வேண்டிய தேவை இல்லை - மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து!
ஆடல், பாடல் நிகழ்வு குறித்த புதிய மனுக்களை விசாரிக்க வேண்டிய தேவை இல்லை - மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து!

மதுரை:ஆடல், பாடல், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதி கோரலில், மனுதாரர் அளிக்கும் மனுவின் அடிப்படையில் 7 நாட்களில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்ற உத்தரவு மதுரைக்கிளை நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இனி புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (ஜூன் 1), வழக்கறிஞர்கள் ஆடல், பாடல் அனுமதி குறித்து புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்கக் கோரினர். அப்போது ஆடல், பாடல் நிகழ்வு குறித்த புதிய மனுக்களை விசாரிக்க வேண்டிய தேவை இல்லை என்றும், ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த காவல் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அப்போது நீதிபதிகள், ‘ஆடல், பாடல் குறித்து கடந்த வாரம் விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரமேஷ், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு மிகத் தெளிவான உத்தரவாக உள்ளது. எனவே புதிய உத்தரவுக்கு எந்த வித அவசியமும் இல்லை’ என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:Anna University: பிஇ, பிடெக் படிப்பு 2ஆம் ஆண்டில் நேரடியாக சேர விண்ணப்பிக்கலாம்

மதுரைக்கிளையின் பழைய உத்தரவில் “ஆடல், பாடல், கரகாட்டம் மற்றும் கலாச்சார நாடக நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தால், அதை 7 நாட்களுக்குள் காவல் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை என்றால் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும். மேலும் ஆடல், பாடல், கரகாட்டம், நாடகம் நிகழ்ச்சிகளில் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால், அதனை முழுமையாக பின்பற்ற வேண்டும் ”எனவும் பிறப்பித்து இருந்தது.

எனவே, இந்த உத்தரவே போதுமான உத்தரவாக உள்ளது என்றும், இனி புதிய மனுக்ளை தாக்கல் செய்து அதில் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய எவ்வித தேவையும் இல்லை என்றும், எனவே இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு, காவல் துறை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி புதிய வழக்கு தாக்கல் செய்யத் தேவை இல்லை என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:கோவையில் ராட்சத பேனர் சரிந்த விபத்தில் 3 தொழிலாளிகள் பலி

ABOUT THE AUTHOR

...view details