மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் 16ஆம் கால் மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 21) விநாயகர் சிலை வைப்பதற்காக அனுமன் சேனா மாநில பொதுச்செயலாளர் ராமலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 11 பேர் சரக்கு வாகனத்தில் 9 அடி விநாயகர் சிலை, 3 அடி விநாயகர் 2 சிலைகளுடன் ஊர்வலமாகத் திருப்பரங்குன்றம் பாதையில் சென்றுகொண்டிருந்தனர்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் மதன கலா தலைமையிலான காவல் துறையினர் அனுமன் சேனை ராமலிங்கம், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரையும், அவர்களிடமிருந்த மூன்று விநாயகர் சிலைகளையும் சிறைப்பிடித்தனர்.