மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "வெளிப்படைத்தன்மை அரசிடம் இல்லை. மக்கள் பீதியடைவார்கள் என நினைக்கின்றனர். திமுக ஆட்சியில் தான் மரண எண்ணிக்கை கூடியுள்ளது. எங்கள் ஆட்சிக் காலத்தில் நோயாளிகளே இல்லையே! அதிமுக ஆட்சியில் நோயாளிகள் இல்லையென்பதால் ஆக்ஸிஜன் தேவை இல்லாமல் இருந்தது.
’மதுரைக்கு குறைவான தடுப்பூசிகள் விநியோகம்’
மதுரைக்கு கரோனா தடுப்பூசி குறைவாக வந்துள்ளதாக மதுரை ஆட்சியர் தெரிவித்திருந்தார். அதிக அளவு ஊசிகளைக் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பள்ளிக்கூடங்கள் பல திறக்காமல் உள்ள நிலையில், அங்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரோனா தொற்று குறைந்துள்ளது. ஊரடங்கு ஓரளவு கைகொடுத்துள்ளது. பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். கூடுதலாக 5,000 ரூபாய் கொடுக்க முதலமைச்சர் முன்வர வேண்டும்.