மதுரை:தேனி - போடிநாயக்கனூர் இடையே அகல ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் 2 அன்று அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த 15 கி.மீ. தூரத்தை 120 கி.மீ. வேகத்தில் ரயில் இன்ஜின் 9 நிமிடங்கள் 20 நொடிகளில் கடந்தது.
இந்நிலையில் ரயில் பாதையில் ரயில் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறதா, வேறு எதுவும் சிறு குறைபாடுகள் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க நவீன ஆய்வு ரயில் பெட்டி (Oscillation Monitoring Car) ஒன்று இந்த ரயில் பாதையில் பயன்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படவுள்ளது. ஆய்வு முடிவுகளை இந்தப் பெட்டியில் உள்ள கணிப்பொறி உடனுக்குடன் பதிவு செய்து வெளியிடும்.