தமிழ்நாடு

tamil nadu

மதுரை சித்தாதிபுரம் தடுப்பணை நிரம்பி வழியும் எழில்மிகு ட்ரோன் காட்சிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 2:13 PM IST

Updated : Dec 7, 2023, 3:15 PM IST

Sithathipuram Step Dam Video: சித்தாதிபுரம் தடுப்பணையில் நீர் நிரம்பி வழிந்தோடும் காட்சிகள் ட்ரோன் கேமரா மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சித்தாதிபுரம் படித்துறை அணையில் நிரம்பி வழியும் தண்ணீர்
சித்தாதிபுரம் படித்துறை அணையில் நிரம்பி வழியும் தண்ணீர்

மதுரை சித்தாதிபுரம் தடுப்பணை நிரம்பி வழியும் எழில்மிகு ட்ரோன் காட்சிகள்

மதுரை: வட கிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள், ஏரிகள் நிரம்பியதை அடுத்து, அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. அந்த வகையில், வைகை அணையிலும் நீர் திறந்துவிடப்பட்டு, வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சித்தாதிபுரம் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

மதுரையின் சுற்றுவட்டாரத்தில் இந்த அணை அமைந்திருப்பதால், பலரும் இந்த அணையை அறிய வாய்ப்பில்லை. மதுரையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குருவித்துறை கிராமத்திற்கு உட்பட்ட சித்தாதிபுரம் என்ற ஊரில், இந்த சித்தாதிபுரம் தடுப்பணை அமைந்துள்ளது. நீர் மேலாண்மையை கருத்தில் கொண்டு பாண்டியர்கள் உருவாக்கியது தான் இந்த தடுப்பணை. வடக்கு தெற்காக ஓடி வரும் வைகை, இந்த இடத்தில் திடுமென கிழக்கு மேற்காகத் திரும்புகிறது.

இதனால் வைகையாற்றின் மணல் விளைநிலங்களில் வாரியிறைக்கப்படும் அபாயத்தைத் தடுக்கவும், இங்கிருந்து ஒரு கால் அமைத்து 9 கி.மீ. தொலைவிலுள்ள தென்கரை பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லவும் இந்த தடுப்பணை உருவாக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக, சித்தாதிபுரம் தடுப்பணையில் தற்போது நீர் நிரம்பி வழிகிறது.

மேலும், சித்தாதிபுரம் தடுப்பணையில் நீர் நிரம்பி வழிந்தோடும் காட்சிகள் ட்ரோன் கேமரா மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சியின் ரம்மியமான கழுகுப்பார்வை காட்சிகள்!

Last Updated :Dec 7, 2023, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details