தமிழ்நாடு

tamil nadu

பூம்புகார் கராத்தே கிட்ஸுக்கு ஜாம்... ஜாம்... வரவேற்பு!

By

Published : Feb 3, 2020, 8:49 AM IST

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பூம்புகார் அரசுப்பள்ளி மாணவர்கள் வென்றனர்.

nagapattinam karate kids
nagapattinam karate kids

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரில் அரசு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர்.

இப்பள்ளியில் கணிணி பயிற்சி, ஸ்மார்ட் கிளாஸ், ஆங்கில வழிக்கல்வி, யோகா பயிற்சி, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பல்வேறு கலைகளும் பயிற்றுவிக்கப்பட்டுவருகின்றன.

தனியார் பள்ளி மாணவர்களே அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது இப்பள்ளி. அரசுத் திட்டங்களை மட்டுமே எதிர்பார்த்திராமல் கிராம நிர்வாகிகள், கிராம மக்கள் இணைந்து உருவாக்கிய கல்விக் குழு மாணவர்களின் பல்வேறு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்துவருகிறது. ஆண்டில் மூன்று மாதம் மட்டுமே அரசால் வழங்கப்பட்ட தற்காப்புக் கலை பயிற்சியை தலைமை ஆசிரியர், கிராம மக்களின் முயற்சியால் ஆண்டு முழுவதும் பயிற்றுவிக்கப்படுகிறது.

கோப்பை வென்ற சிங்கப் பெண்

அதன் விளைவாக, இப்பள்ளி மாணவ-மாணவிகள் மூன்று பேர் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று விளையாடினர். அதற்கான செலவுளை கிராம கல்வி குழுவினரே ஏற்பாடு செய்தனர்.

இப்போட்டியில் விளையாடிய இப்பள்ளி மாணவி சுஜி தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். தகவல் அறிந்த கிராம மக்கள் மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவுசெய்தனர்.

அதன்படி நேற்று ஊர் திரும்பிய சுஜி உள்ளிட்ட மாணவர்களுக்கு கிராம மக்கள், பள்ளிக் கல்விக் குழு, பள்ளி மாணவர்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது.

பூம்புகார் மாரியம்மன் கோயிலிலிருந்து தாரைதப்பட்டை முழங்க மாணவர்களை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி வீதியாக ஊர்வலமாக அழைத்துச்சென்று பாராட்டி மகிழ்ந்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைப் பூம்புகார் மீனவர் கிராம நிர்வாகிககள் செய்திருந்தனர்.

இதையும் படிங்க : 909 ஆண்டுகளுக்கு பிறகு வந்த பாலிண்ட்ரோம் தினம்: '02-02-2020' அடடே...!

Intro:சீர்காழி அருகே தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பூம்புகார் அரசு பள்ளி மாணவர்கள். தாரத்தப்பட்டையுடன் ஊர்வலமாக அழைத்து மரியாதை செய்த கிராமமக்கள்.Body:நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரில் அரசு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் கணிணி பயிற்சி,ஸ்மார்ட் கிளாஸ்,ஆங்கில வழிக்கல்வி,யோகா பயிற்சி,சிலம்பம்,கராத்தே பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கலைகளும் பயிற்றுவிக்கபட்டு வருகிது.தனியார் பள்ளி மாணவர்களே அரசு பள்ளியில் சேர்ந்து படிக்கும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது இப்பள்ளி. அரசு திட்டங்களை மட்டுமே எதிர்பார்திராமல் கிராம நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து உறுவாக்கிய கல்வி குழு மாணவர்களின் பல்வேறு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.ஆண்டில் மூன்று மாதம் மட்டுமே அரசால் வழங்கபட்ட தற்காப்பு கலை பயிற்சியை ஆண்டு முழுவதும் பயிற்றுவிக்க தலைமை ஆசிரியரும் கிராமமக்களும் ஏற்படுத்தினர். அதன் விளைவாக இப்பள்ளி மாணவ மாணவிகள் மூன்று பேர் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று விளையாடினர். அதற்கான செலவுளை கிராம கல்வி குழுவினரே ஏற்பாடு செய்தனர். இப்போட்டியில் விளையாடிய இப்பள்ளி மாணவி சுஜி தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றார். தகவல் அறிந்த கிராம மக்கள் மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்தர்.அதன்படி இன்று தாயகம் திரும்பிய சுஜி உள்ளிட்ட மாணவர்களுக்கு கிராமமக்கள் ,பள்ளி கல்வி குழு மற்றும் பள்ளி மாணவர்கள் சார்பாக சிறப்பான வரவேற்ப்பு அளிக்கபட்டது. பூம்புகார் மாரியம்மன் கோவிலில் இருந்து தாரதப்பட்டை முழங்க மாணவர்களை அலங்கரிக்கபட்ட வாகனத்தில் வீதி வீதியாக ஊர்வலமாக அழைத்து சென்று பாராட்டி மகிழ்ந்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுளை பூம்புகார் மீனவர் கிராம நிர்வாகிககள் செய்திருந்தனர்.Conclusion:

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details