தமிழ்நாடு

tamil nadu

ஓசூரில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் சிரமம்!

By

Published : Jan 2, 2023, 11:20 AM IST

ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ஓசூரில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் சிரமம்
ஓசூரில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் சிரமம்

ஓசூரில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் சிரமம்

கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனி அதிகரித்து குளிர் வாட்டி வதைக்கும். இந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் பனிப்பொழிவு தாக்கம் இல்லாமல் இருந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் படிப்படியாக பனிப்பொழிவு அதிகரித்து தற்போது ஜனவரி மாத துவக்கத்திலேயே மழையை போல் பனிப்பொழிவு காணப்படுகிறது.

இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாரே ஊர்ந்து சென்றன. பனிப்பொழிவால் அருகில் செல்லும் வாகனங்கள் கூட கண்ணில் தென்படாத நிலை ஏற்பட்டது.

காலை முதல் பனிப்பொழிவு அதிகரித்ததால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதையும் படிங்க: கோயில்களில் கொள்ளையடித்த துணி வியாபாரி கைது - வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details