கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று (ஏப். 17) விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 265ஆவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு அமைச்சர் மரியாதை
கரூர்: விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்குப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை - எம்.ஆர். விஜயபாஸ்கர்
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சின்னசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் காமராஜ், பாப்பாசுந்தரம் உள்ளிட்ட அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு மலர்த்தூவி புகழஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: ’அவருடைய இழப்பு தமிழ் சமூகத்துக்கே பெரிய இழப்பு’ - அமைச்சர் ஜெயக்குமார்