தமிழ்நாடு

tamil nadu

சாமிதோப்பு முத்துக் குடை ஊர்வலம்!

By

Published : Apr 12, 2019, 11:37 AM IST

நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி சார்பில் சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக் குடை ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது.

சாமித்தோப்பு முத்துக் குடை ஊர்வலம்!

அய்யா வைகுண்டசாமி சாமிதோப்பு வடக்கு வாசலில் ஆறு வருடங்கள் தவம் இருந்தார். தவத்தை நிறைவேற்றிவிட்டு தனது சீடர்கள் மற்றும் பக்தர்களோடு முட்டப்பதிக்கு ஊர்வலமாக சென்று அங்குள்ள பால்கடலில் புனித நீராடி இறைவனாக அவதாரம் எடுத்தார்.

பின்னர் அன்று மாலை தன்னுடைய பக்தர்களோடு மீண்டும் சாமிதோப்பு தலைமைப்பதிக்கு வந்ததாக அகிலத்திரட்டு (வழிபாட்டு முறை நூல்) கூறுகிறது. இந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக் குடை ஊர்வலம் செல்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருட முத்துக்குடை ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து தலைமைப்பதிக்கு முன்பு இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சாமித்தோப்பு முத்துக் குடை ஊர்வலம்!
TN_KNK_01_12_MUTHKUDAI_URVALAM_SCRIPT_TN10005 அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி சார்பில் சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் கலந்துகொண்ட முத்துக் குடை ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. அய்யா வைகுண்டசாமி சாமிதோப்பு வடக்கு வாசலில் 6 வருடங்கள் தவம் இருந்தார். தவத்தை நிறைவேற்றிவிட்டு தனது சீடர்கள் மற்றும் பக்தர்களோடு முட்டப்பதிக்கு ஊர்வலமாக சென்று அங்குள்ள பால்கடலில் புனித நீராடி இறைவனாக அவதாரம் எடுத்தார் பின்னர் அன்று மாலை தன்னுடைய பக்தர்களோடு மீண்டும் சாமிதோப்பு தலைமைப்பதிக்கு வந்ததாக அகிலத்திரட்டு கூறுகிறது. இந்த நாளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக் குடை ஊர்வலம் செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருட முத்துக்குடை ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து தலைமைப்பதிக்கு முன்பு இருந்து ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை பாலபிரஜாபதி அடிகளார் துவக்கி வைத்தார். முத்துக் குடை பிடித்த பக்தர்கள் முன் செல்ல ஊர்வலம் கரும்பாட்டூர், விஜயநகரி, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம் வழியாக முட்டப்பதியை சென்றடைந்தது. அங்கு பக்தர்கள் கடலில் புனித நீராடினர். பின்னர் முட்டப் பதியில் பணிவிடை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதர்மம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அன்று மாலை முட்டபதியிலிருந்து மீண்டும் ஊர்வலம் சுவாமிதோப்பு வந்தடைகிறது. விஷுவல் முத்துக்குடை ஊர்வலம் காட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details