தமிழ்நாடு

tamil nadu

திமுக -காங்., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பால பிரஜாபதி அடிகளார் -பெரும் பரபரப்பு

By

Published : Oct 17, 2019, 6:12 PM IST

கன்னியாகுமரி: நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் தமிழர் நலன் காக்க திமுக கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவளிப்பதாக சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

bala prajapathy adigalar

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் பால பிரஜாபதி அடிகளார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'தமிழ்நாட்டில் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆளும் ஆதிக்க மனப்பான்மை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழல் தொடர்ந்தால், தமிழ் மொழி முற்றிலும் அழிந்து போகும். தமிழை பாதுகாக்க, அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் சூழலில் தமிழ் மொழி வாழவும், தமிழர் நலன், உரிமையை மீட்டெடுக்கவும் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது கட்டாயம் அய்யா வழி பேரியக்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ் வாழ நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு அளிக்கிறோம்.

திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பால பிரஜாபதி அடிகளார்

அதற்காக, விரைவில் நாங்குநேரி இடைத்தேர்தலில் பரப்புரையில் ஈடுபடவுள்ளேன்' என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக நாங்குநேரி தொகுதி வேட்பாளர் நாராயணன், அண்மையில் சாமிதோப்புக்கு வந்து பாலபிரஜாபதியை, சந்தித்து ஆதரவு தர கோரினார். இந்நிலையில், திமுக-காங்., கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக, பாலபிரஜாபதி அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் தமிழர் நலன் காக்க திமுக கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவளிப்பதாக சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார் அதிரடி பேட்டி.Body:tn_knk_02_samithoppuadikalar_byte_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் தமிழர் நலன் காக்க திமுக கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவளிப்பதாக சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார் அதிரடி பேட்டி.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆளும் ஆதிக்க மனப்பான்மை அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற சூழல் தொடர்ந்தால், தமிழ் மொழி முற்றிலும் அழிந்து போகும்.
தமிழை பாதுகாக்க, அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போதைய நிலையில், தமிழ் மொழி வாழவும், தமிழர் நலன், உரிமையை மீட்டெடுக்கவும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம், அய்யா வழி பேரியக்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழ் வாழ
நான்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில், தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
அவர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, நாங்குநேரி தொகுதியில் வசிக்கும் அய்யா வழியை பின்பற்றும் மக்கள் ஓட்டு போட வேண்டும்.
தி.மு.க.,-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு கோரி, விரைவில் நாங்குநேரி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன் என அவர் கூறினார்.
அ.தி.மு.க., நாங்குநேரி தொகுதி வேட்பாளர் நாராயணன். அண்மையில் சாமிதோப்புக்கு வந்த அவர், பாலபிரஜாபதியை, சந்தித்து ஆதரவு தர கோரினார். இந்நிலையில், நேற்று தி.மு.க.,-காங்., கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக, பாலபிரஜாபதி அறிவித்து இருப்பது அய்யா வழி மக்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையின் நெல்லை மாவட்ட தலைவராக இருப்பவர் நாங்குநேரி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details