கன்னியாகுமரி மாவட்ட 'சைல்டு லைன்' திட்ட இயக்குனர் மைக்கேல்ராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
'குழந்தைகள் உதவி மையமான சைல்டு லைன் தொலைபேசி என் 1098-க்கு குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 1743 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 315 குழந்தைகளுக்கு பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட்டுள்ளது அதன்படி,
- உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளான 26 குழந்தைகள்,
- குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 19 குழந்தைகள்,
- பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 48 குழந்தைகள்,
- குழந்தைத் திருமணங்களிலிருந்து 6 குழந்தைகள்,
- பாலியல் வன்முறையிலிருந்து 7 குழந்தைகள்,
- கல்வி சம்பந்தமான உதவி கேட்ட 35 குழந்தைகள்,
- பெற்றோருடன் சேர்த்து வைக்கப்பட்ட 18 குழந்தைகள்.
என்று பல்வேறு பிரச்சினைகளில் இருந்து 315 குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.