மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் காஷ்மீரில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி பாரா சைக்கிள் ஓட்டுநர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் சைக்கிள் பேரணி தொடங்கினர். இதனை எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் ஸ்ரீராகேஷ் அஸ்தானா தொடங்கிவைத்தார்.
அங்கிருந்து டெல்லி, மதுரா, நாக்பூர், ஹைதராபாத், தர்மபுரி, மதுரை, நெல்லை வழியாக 3 ஆயிரத்து 842 கி.மீட்டர் தூரத்தை கடந்து நேற்று (டிச.31) மாலை கன்னியாகுமரியில் நிறைவு செய்தனர்.
சைக்கிள் பயணக் குழுவினரை எல்லை பாதுகாப்புப்படை டிஐஜி பேபிஜோசப், முதல் பாரா சைக்கிள் ஓட்டுநர் ஆதித்யா மேத்தா மற்றும் குமரி ஜவான்ஸ் அமைப்பினர் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.