தமிழ்நாடு

tamil nadu

கோயில் இடத்தை ஆக்கிரமித்து டீக்கடை அமைப்பு.. அப்புறப்படுத்த வந்த அதிகாரிகள் முன் பெண் செய்த காரியம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 12:05 PM IST

woman suicide attempt : பல வருடங்களாக வாடகை செலுத்தாத டீக்கடையை அகற்ற வந்த அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து பெண் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!
ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!

ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!

கன்னியாகுமரி:நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஆதிமூல விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் எம்.எஸ். ரோடு ராஜபாதை பகுதியில் உள்ள நிலையில் இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த நிஷா பாப்பா என்ற பெண் டீக்கடை நடத்தி வந்துள்ளார்.

கடந்த 19 வருடங்களாக வாடகை கொடுக்காமல் நிஷா பாப்பா டீ கடையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கோயில் இடத்தை ஆக்கிரமித்து டீக்கடை நடத்தி வந்ததால் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை நிஷா பாப்பாவுக்கு அபராதமாக விதித்ததுடன் அந்த தொகையை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது.

இந்நிலையில் அபராத தொகையை செலுத்தாதலால் உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து 3 முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கால அவகாசம் முடிந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம் தலைமையிலான ஊழியர்கள் எம்.எஸ்.ரோட்டில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் நடத்தி வரும் டீக்கடையினை அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர்.

வழக்கம்போல் நேற்று (செப் 5) கடையை திறந்த நிஷாவை அறநிலையத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்து கடைக்குள் இருந்த அவரை வெளியேறுமாறு கூறினர். ஆனால் நிஷா கடையை விட்டு வெளியேற மறுத்த அவர் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கடையின் உள்ளேயே அமர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க:பானிபூரி கடை வைப்பதில் தகராறு.. வடமாநில தொழிலாளர்களிடையே மோதல்! கத்திக் குத்து சம்பவம்!

அப்போது பேசிய நிஷா, "நான் கடந்த 20 ஆண்டுகளாக இந்த கடையை நம்பி குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனக்கு எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல் திடீரென கடையை இடிக்க வந்துள்ளார்கள். எனவே கடையை இடிக்க விடமாட்டேன். எனது மகளுக்கு இன்னும் 15 நாளில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த டீக்கடையில் உள்ள வருமானத்தை வைத்துதான் எனது 2 மகள்களையும் காப்பாற்றி வருகிறேன்" என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைத் தொடர்ந்து வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீண்டும் பொக்லைன் எந்திரம் உதவியுடன் கடையை இடிக்க முயன்ற போது கடைக்குள் இருந்த நிஷா பாப்பா தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நிஷாவின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். மேலும் போதிய போலீசார் இல்லாததால் அந்த கடையை இடித்து அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடை இடிக்க வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் முன் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:பட்டியலின பெண் சமைப்பதால் காலை உணவு திட்டம் புறக்கணிப்பா? அரசுப் பள்ளியில் கொடூரம்! சாட்டையை சுழற்றிய மாவட்ட ஆட்சியர்! நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details