தமிழ்நாடு

tamil nadu

'ஆத்தி இம்புட்டு கூட்டமா' - காணும் பொங்கலில் களைகட்டிய கன்னியாகுமரி

By

Published : Jan 17, 2020, 1:52 PM IST

கன்னியாகுமரி: பொங்கல் பண்டிகையின் நிறைவு விழாவான காணும் பொங்கலை முன்னிட்டு சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர்.

kanum
kanum

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் நிறைவு நாள் பாரம்பரியமாக காணும் பொங்கல் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்பண்டிகையை முன்னிட்டு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் முக்கியச் சுற்றுலா மையங்களுக்கு மக்கள் செல்வது வழக்கம்.

அதன்படி சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அவர்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் வருகைப் புரிந்தனர்.

இங்குள்ள திரிவேணி சங்கமம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. கடற்கரை அலையில் விளையாடியும், குளித்தும் மக்கள் மகிழ்ந்தனர்.

காணும் பொங்கலில் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக காவல் துறை சார்பில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

காணும் பொங்கலில் களைகட்டிய கன்னியாகுமரி

இதையும் படிங்க: காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

ABOUT THE AUTHOR

...view details