காஞ்சிபுரம்: படப்பை அடுத்த மணிமங்கலம் ஆஞ்சநேயர் கோயில் தெருவில் வைத்து சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளான விக்னேஷ்(23), மற்றும் சுரேந்தர்(20), ஆகிய இருவரையும் காவல் நிலையம் அருகிலேயே வைத்து மிக கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்துவிட்டு, மணிமங்கலம் காவல் நிலையத்தில் வந்து நான்கு பேர் சரணடைந்தனர்.
தகவலறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்தது மணிமங்கலம் பகுதியைச்சேர்ந்த விக்னேஷ்வரன்(22),புஷ்பராஜ்(19), லோகேஸ்வரன்(19), டில்லிபாபு(21) என்பதும், இவர்களது நண்பரான தேவேந்திரன் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்த வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட இருவரும் முக்கியக் குற்றவாளிகள் என்றும்; இவர்கள் கடந்த மாதம் தான் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளனர் என்றும் தகவல் தெரியவந்துள்ளது.
தேவேந்திரனின் நண்பர்கள் நேற்றைய முன் தினம் இரவு லோகேஸ்வரனின் தம்பியை அவரது வீட்டினருகே சென்று மிரட்டிவிட்டு, ’உங்க அண்ணன் எங்கடா, அவனை பார்த்து இருந்துக்க சொல்லு’ என மிரட்டி விட்டு வந்துள்ளனர்.