தமிழ்நாடு

tamil nadu

குடும்பத் தகராறு காரணமாக தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை!

By

Published : Dec 11, 2020, 1:32 PM IST

காஞ்சிபுரம்: ஒலிமுகமதுபேட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக தம்பதி தூக்கிட்டு தற்கொலை
குடும்பத் தகராறு காரணமாக தம்பதி தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமதுபேட்டை அருகேவுள்ள விநாயகபுரம் குப்பம்மாள் நகர் பகுதியில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்த தங்கம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் (40) என்பவர் வசித்துவந்தார்.

இவரது மனைவி மணிமேகலை (35), மகள்கள் முத்து அட்சயா (8) நிவாசினி (4). கதிர்வேல் அதே பகுதியில் முருகன் டிரேடர்ஸ் என்ற டைல்ஸ் கடை ஒன்றை நடத்திவந்தார்.

இந்நிலையில் கதிர்வேலின் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவி மணிமேகலை, அடிக்கடி கணவரிடம் தகராறு செய்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நேற்றிரவு (டிச.10) அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். பின்னர், காலையில் குழந்தைகள் எழுந்து பார்த்தபோது தாய், தந்தை இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உடற்கூராய்வில், மணிமேகலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சிறிது நேரத்திற்குப் பிறகு கணவர் கதிர்வேலும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கடன் தொல்லையால் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details