தமிழ்நாடு

tamil nadu

CCTV: பேருந்தின் பின்சக்கரம் ஏறியதில் முதியவர் தலைநசுங்கி உயிரிழப்பு

By

Published : Nov 3, 2022, 11:07 PM IST

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் முதியவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat

காஞ்சிபுரத்தைச்சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65). இவர் தனது இருசக்கர வாகனத்தில் காமராஜர் வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கிச்சென்ற அரசுப்பேருந்து ரயில்வே சாலை வழியாக செல்லமால் காமராஜ் வீதி வழியாக போக்குவரத்து விதிகளை மீறி வழி மாறி வந்தது.

அப்போது, பேருந்தின் முன்னே பன்னீர்செல்வம் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது உரசியதில் பன்னீர்செல்வம் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். இதில், முதியவர் பன்னீர்செல்வத்தின் மீது அரசுப் பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி

இதையும் படிங்க:இளைஞர் மீது ஆசிட் வீசிய தந்தை, மகள் கைது

ABOUT THE AUTHOR

...view details