காஞ்சிபுரத்தைச்சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65). இவர் தனது இருசக்கர வாகனத்தில் காமராஜர் வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கிச்சென்ற அரசுப்பேருந்து ரயில்வே சாலை வழியாக செல்லமால் காமராஜ் வீதி வழியாக போக்குவரத்து விதிகளை மீறி வழி மாறி வந்தது.
அப்போது, பேருந்தின் முன்னே பன்னீர்செல்வம் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது உரசியதில் பன்னீர்செல்வம் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். இதில், முதியவர் பன்னீர்செல்வத்தின் மீது அரசுப் பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.