கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் சொந்தமாக பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான இரு பசு மாடுகளும், அப்பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவரது பசு மாடும் உளுந்தூர்பேட்டை சேலம் சாலையிலுள்ள சுடுகாடு பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்தது.
அப்போது சுடுகாட்டிலிருந்த மோட்டார் பம்பில் அறுந்து கிடந்த மின்சார ஒயரின் மீது மாடுகள் கால் வைத்ததில் மூன்று பசு மாடுகளும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்து தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த பசுமாடுகளை பரிசோதனை செய்தனர்.