தமிழ்நாடு

tamil nadu

தீ விபத்தில் காயமடைந்தோரை நேரில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு!

By

Published : Oct 27, 2021, 12:03 AM IST

Updated : Oct 27, 2021, 12:26 AM IST

சங்கராபுரத்தில் நேற்று மாலை பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தீ விபத்தில் காயமடைந்தோரை நேரில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு!
தீ விபத்தில் காயமடைந்தோரை நேரில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திலுள்ள பட்டாசு கடையில் இன்று(அக்.26) மாலை எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். தீக்காயமடைந்த 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பட்டாசுகள் அருகிலிருந்த பேக்கரி, ஹோட்டல், மளிகைக்கடைகளில் சிதறியதால் அங்கிருந்த நான்கு சிலிண்டர்களும் வெடித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

காயமடைந்தோரை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு தொடர்பான காணொலி

இந்நிலையில் தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது காயமடைந்தோருக்கு வழங்கபடும் சிகிச்சை முறைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்

இதையும் படிங்க:தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் - மு.க.ஸ்டாலின்

Last Updated :Oct 27, 2021, 12:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details