தமிழ்நாடு

tamil nadu

சாலையின் நடுவே உள்ளே மையத்தடுப்பில் வேன் மோதி ஓட்டுநர் உயிரிழப்பு!

By

Published : Apr 24, 2021, 5:24 PM IST

ஈரோடு: சாலையின் நடுவே உள்ளே மையத் தடுப்பில் வேன் மோதி ஓட்டுநர் உயிரிழந்தார்.

சாலை விபத்து
சாலை விபத்து

ஈரோடு மேட்டுக்கடையிலிருந்து திண்டல் நோக்கி சரக்கு வேனில் இறைச்சி கோழிகளை ஏற்றிக்கொண்டு உடுமலையைச் சேர்ந்த அழகர் என்பவர் சென்றுகொண்டிருந்தார்.

திண்டல் அருகே வேப்பம்பாளையம் பிரிவில் வந்த அவ்வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த மையத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அழகர் உயிரிழந்தார். அவருடன் வந்தவர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த அழகரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details