தமிழ்நாடு

tamil nadu

தொடர்மழையால் இடிந்து விழுந்த சுவர் - மூதாட்டி உயிரிழப்பு

By

Published : Oct 3, 2021, 12:44 PM IST

ஈரோட்டில் தொடர்மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

grandmother died by wall collapse  wall collapsed due to continuous rain  wall collapsed due to continuous rain in erode  erode news  erode latest news  rain  continuous rain  heavy rain  wall collapsed  கனமழை  மழை  தொடர்மழை  கனமழையால் இடிந்து விழுந்த சுவர்  ஈரோட்டில் கனமழையால் இடிந்து விழுந்த சுவர்  ஈரோடு செய்திகள்
கனமழையால் இடிந்து விழுந்த சுவர்

ஈரோடு: மரப்பாலம் பகுதி நேதாஜி வீதியில் அங்கம்மாள் என்ற மூதாட்டி, தனது மகன் ராமசாமி என்பவருடன் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 2) மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்யத் தொடங்கியது. இம்மழையானது இரவு முழுவதும் நீடித்தது. தொடர்ந்து பெய்துவந்த மழையால், அங்கம்மாள் வசித்துவந்த ஓட்டு வீடு முழுவதும் ஈரம் பரவியது.

இதனால் இன்று (அக்டோபர் 3) அதிகாலை சுமார் மூன்று மணியளவில் வீட்டின் சுவர், மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. சுவரானது அங்கம்மாள், ராமசாமி மீது விழுந்ததால், இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினரும், தீயணைப்பு வீரர்களும், சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்தில் சிக்கிக்கொண்ட ராமசாமியை பலத்த காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து அங்கம்மாளின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆசிரமம் டு உல்லாசம்: சென்னையைக் கலக்கிய கார் திருடன்!

ABOUT THE AUTHOR

...view details