தமிழ்நாடு

tamil nadu

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; டெய்லருக்கு 10 ஆண்டுகள் சிறை!

By

Published : Oct 28, 2021, 11:40 AM IST

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டெய்லருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெய்லர் பழனிசாமி
டெய்லர் பழனிசாமி

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கிராமத்தில் கூலி வேலைக்கு செல்லும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது ஐந்து வயது மகள் வீட்டின் முன்பு விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, சிறுமியின் வீட்டருகே உள்ள கடையில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, சிறுமி வீட்டின் முன்பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை தேடியுள்ளனர். அப்போது சிறுமிக்கு டெய்லர் பழனிசாமி பாலியல் தொந்தரவளித்ததைக் கண்டு, சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டெய்லர் பழனிசாமி

இதனையடுத்து சம்பவம் குறித்து, கோபி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். பின்னர் இது தொடர்பான வழக்கு ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று (அக்.27) வழக்கை விசாரித்த நீதிபதி, பழனிசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:அரும்புகளின் காதல் விவகாரம் : சிறுவனை தாக்கிய சிறுமியின் பெற்றோர் மீது புகார்

ABOUT THE AUTHOR

...view details