உக்கரம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜ். இவர் புதன்கிழமை பணம் எடுப்பதற்காக சத்தியமங்கலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு வந்துள்ளார். ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயற்சித்த போது பணம் வரவில்லை. அதன் பின் ஒரு வழியாக சிறிது நேரம் கழித்து ரூ.5 ஆயிரம் எடுத்துள்ளார். அருகில் இருந்து இதனை பார்த்த நபர் நடராஜுக்கு உதவி செய்வது போல நடித்துள்ளார்.
அப்போது, அடையாளம் தெரியாத நபர் நடராஜிடம் ஏடிஏம் கார்டை வாங்கி பணம் எடுத்து கொடுக்க உதவுவது போல நடித்து, வாங்கிய கார்டுக்கு பதிலாக மற்றொரு கார்டை கொடுத்து விட்டார். பின்னர் நடராஜனுக்கு தெரியாமல் ரூ.58, 800 எடுத்துள்ளார். பணம் எடுத்தது குறித்த எந்தத் தகவலும் செல்போனுக்கு வரவில்லை.