தமிழ்நாடு

tamil nadu

கடும் பனிப்பொழிவு.. பவானிசாகரில் மீன்பிடி தொழில் பாதிப்பு!

By

Published : Dec 7, 2022, 12:44 PM IST

ஈரோடு பவானிசாகர் அணை பகுதியில் கடும் பனிப்பொழிவால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு:105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானி சாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 104 அடியாகவும், நீர் இருப்பு 31.9 டிஎம்சி ஆகவும் உள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் அணை நீர்த்தேக்க பகுதியில் டன் கணக்கில் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனைக்காக ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணை நீர்த்தேக்க பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர்.

கடும் பனிப்பொழிவு..பவானிசாகர் அணைக்கட்டில் மீன்பிடி தொழில் பாதிப்பு

கடும் பனிப்பொழிவு காரணமாக மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் மீன் வரத்து குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 104 அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக கீழ்பவானி வாய்க்காலில் 2000 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்று மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்(Mandous Cyclone):எங்கெங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

ABOUT THE AUTHOR

...view details