தமிழ்நாடு

tamil nadu

மனைவியை துப்பாக்கி முனையில் மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது!

By

Published : Jun 18, 2021, 3:52 PM IST

ஈரோடு : குடும்பத் தகராறில் மனைவியை துப்பாக்கி முனையில் மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ராணுவ வீரர் கைது!
முன்னாள் ராணுவ வீரர் கைது!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதிவண்ணன் (40). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி பானுப்பிரியா (32). இவர்கள் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு பானுப்ரியா தனது தாய் வீடானா நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள சிங்களன் கோம்பைக்கு சென்று தங்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று (ஜூன்.18) மதிவண்ணன் நாமக்கல் சென்று, மனைவி பானுப்பிரியாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கேட்டுள்ளார். ஆனால், இதற்கு பானுப்பிரியா மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த மதிவண்ணன், தான் கொண்டு வந்த துப்பாக்கியை எடுத்துக் காட்டி ’கொலை செய்து விடுவேன்’ என மிரட்டியுள்ளார்.

இதில் பயந்துபோன பானுப்பிரியா எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மதிவண்ணனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் வைத்திருந்த துப்பாக்கி உரிமம் காலாவதி ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி

ABOUT THE AUTHOR

...view details