ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வே.ரா திருமகன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் அறிவித்தது. கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ஆம் தேதி நிறைவு பெற்றது.
ஒட்டுமொத்தமாக இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், மற்றும் சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.