தமிழ்நாடு

tamil nadu

கல்குவாரியில் நீச்சல் பழகச் சென்ற இரண்டு சிறுவர்கள் பலி!

By

Published : Aug 11, 2021, 12:28 PM IST

திண்டுக்கல்: தாத்தா கவுண்டன் பாறை அருகேயுள்ள கல்குவாரியில் நீச்சல் பழகச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீச்சல் பழக சென்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு
நீச்சல் பழக சென்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவரின் மகன் ரசாக் (11) என்ற சிறுவன் கொல்லம்பட்டறையைச் சேர்ந்த தனது நண்பர் குமாருடன் (12) தினசரி நீச்சல் பழகுவதற்காக குவாரிகளுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

அந்த வகையில் இன்று (ஆக.11) தாத்தா கவுண்டன் பாறை குளத்தில் இருவரும் நீச்சல் பழகியபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினரும் கூம்பூர் காவல் துறையினரும் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வேடச்சந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டு சிறுவர்கள் இறந்த செய்தி கேட்டு மருத்துவமனை வந்த அவர்களது பெற்றோர் கதறி அழுத காட்சி அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது. இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details