தமிழ்நாடு

tamil nadu

ஒட்டன்சத்திரத்தில் பயணியர் நிழற்குடை மீது கார் மோதி கோர விபத்து - மூன்று பேர் பலி..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 11:01 PM IST

Car Accident: ஒட்டன்சத்திரம் அருகே அதிவேகமாகச் சென்ற கார் பயணியர் நிழற்குடை மீது மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

oddachatram near car accident three person death
ஒட்டன்சத்திரத்தில் பயணியர் நிழற்குடை மீது கார் மோதி விபத்து - மூன்று பேர் பலி..!

திண்டுக்கல்:ஒட்டன்சத்திரம் அருகே அதிவேகமாகச் சென்ற கார் பயணியர் நிழற்குடை மீது மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தொப்பம்பட்டியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், தமிழரசன் மற்றும் வாகரையைச் சேர்ந்த கனிஸ்வரன், ராகுல் ஆகியோர் மார்க்கம்பட்டி அருகே உள்ள மாம்பாறை முனியப்பன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் முடிந்து ஊருக்குத் திரும்பியுள்ளனர்.

அப்போது வழியில், புளியம்பட்டி அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்லும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த பயணியர் நிழற்குடையில் மோதி விபத்துக்குள்ளானதில் தொப்பம்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம், தமிழரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், படுகாயம் அடைந்த வாகரையைச் சேர்ந்த கனிஸ்வரன், ராகுல் ஆகியோர் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கனிஸ்வரன் இறந்தார்.

மேலும், ராகுல் மேல் சிகிச்சைக்காகக் கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவர் பாதி வழியிலேயே விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து கள்ளிமந்தையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் சிக்கிய இருவரின் உடல் மீட்பு.. மேலாளர், மேற்பார்வையாளர் இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details