திண்டுக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டமானது மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நேற்று (நவ. 26) நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்பு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தையில் அதிக கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.