தமிழ்நாடு

tamil nadu

பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றிய திமுக - முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்

By

Published : Feb 28, 2022, 10:26 PM IST

திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளனர் என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வேடசந்தூரில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

திமுகவை விமர்சித்த  முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்
திமுகவை விமர்சித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்

திண்டுக்கல்: வேடசந்தூர் எரியோடு பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்தும், திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், 'பொய் பேசுவதற்கு திமுகவினருக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.

எந்த காலத்திலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்கும் ஆட்சி தான் இந்த திமுக ஆட்சி. அதிமுகவிலுள்ள முக்கியத் தலைவர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி அடிமட்டத் தொண்டர்கள் வரை பொய் வழக்குகள் போட்டு பழி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வருமான வரி சோதனை என்ற பெயரில் ஏவிவிட்டு சொத்துக்குவிப்பு வழக்கு என்று வழக்கு மட்டுமே போடப்படுகிறது, முறைகேடு என்று வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆட்சியின் நிர்வாகத்தில் நிர்வாக ரீதியாக தவறு செய்திருந்தால் அதை எதுவுமே அவர்களால் சொல்ல முடியவில்லை; நிரூபிக்கவும் முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு என்று மட்டுமே கூறுகிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த அனைத்துத் திட்டங்களும் நாங்கள்தான் கொண்டு வந்தோம். காவிரி குடிநீர் திட்டம் முதல் மருத்துவக் கல்லூரி வரை அனைத்து விஷயங்களையும் பொய் சொல்லி வருகிறார்கள்.

திமுகவை விமர்சித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்

தனக்கு அதிகாரமே இல்லாத ஒரு பிரச்னையில் ஒன்றிய அரசாங்கமே முடிவெடுக்கும் ஒரு பிரச்னையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்கள். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொய் சொல்லி வெற்றிபெற்றுள்ளனர்” என ஆவேசமாகப் பேசினார்.

இதையும் படிங்க:ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்

ABOUT THE AUTHOR

...view details