தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான கரும்பு அரவை கடந்த மாதம் தொடங்கியது.
ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 26 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும், விடுப்பு ஈட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தியும் திடீரென ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணி செய்யாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'பொதுத்துறை சர்க்கரை ஆலை நிறுவனம், கரோனா தொற்றைக் காரணம்காட்டி 10 விழுக்காடு போனஸ் தொகையை குறைத்துள்ளது. அதனை முழுமையாக வழங்க வேண்டும்.