தமிழ்நாடு

tamil nadu

தருமபுரியில் ஆணுறுப்பை வெட்டி கொடூர கொலை.. வனப்பகுதியில் நடந்தது என்ன?

By

Published : Apr 6, 2023, 10:28 AM IST

தருமபுரி மாவட்டம் ஏரியூர் வனப்பகுதியில் ஆணுறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய புகைப்படம்
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய புகைப்படம்

தருமபுரி:பென்னாகரம் அடுத்த ஏரியூர் செல்லும் பகுதியில் சந்தைப்பேட்டைக் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் வனப்பகுதிக்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சல், அடுப்புக்குத் தேவையான விறகு எடுக்கச் செல்வது வழக்கம். அந்த வகையில் புதன்கிழமை சந்தைப்பேட்டை கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

அப்போது வனப்பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஆடை ஏதுவுமின்றி நிர்வாணமாகத் தலை சிதைந்தும், மர்ம உறுப்பு அறுக்கப்பட்டும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சம்பவம் தொடர்பாக ஏரியூர் காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற ஏரியூர் போலீசார் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுதாஸ், பென்னாகரம் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் ஆகியோரும் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார், ரேஷன் அட்டைகளை வீசிவிட்டு சென்ற மக்கள்.. தருமபுரியில் நடந்தது என்ன?

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நபர் யார்? கள்ளக்காதல் விவகாரம் ஏதேனும் காரணமா? வேறு எங்கேயாவது கொலை செய்துவிட்டு சடலத்தை இங்கே வந்து போட்டுச்சென்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தருமபுரி மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பென்னாகரம் அடுத்த நாகமரை பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதன் தனது முன்னாள் காதலை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரது தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்த வீடியோவை வெளியிட்டதோடு முனிராஜும் அங்கேயே தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஏரியூர் அருகே ஆண் நபர் ஒருவரின் சடலம் அதுவும் பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் கிடப்பது போலீசார் மட்டுமல்ல பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: காதலியுடன் ஊர் சுற்ற கால்வாய் மூடிகளை திருடி விற்பனை.. ரோமியோ இளைஞர் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details