தமிழ்நாடு

tamil nadu

காவிரி பிரச்சினையில், தமிழக அரசு தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 6:54 PM IST

Anbumani Ramadoss byte in Dharmapuri: தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகள் தரமற்ற நெடுஞ்சாலைகளாக அமைக்கப்பட்டு வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்

தருமபுரி:கம்பைநல்லூர் பேரூராட்சியில் 2022 - 2023ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 13 லட்சம் மதிப்பிலான இரண்டு உயர் மின் கோபுர விளக்குகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்தார்.

ஒகேனக்கல் காவிரி உபரிநீா் திட்டம் செயல்படுத்த வேண்டும்: இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, “கடந்த ஏழு ஆண்டுகளாக அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒகேனக்கல் காவிரி உபரிநீா் திட்டத்தை செயல்படுத்த பல முறை வலியுறுத்தினர். நான் முதலமைச்சரை சந்தித்து மூன்று முறை கேட்டு இருக்கிறேன். மழைக்காலங்களில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தி மூன்று டிஎம்சி தண்ணீரை நீரேற்றம் மூலம் நிரப்பினால் புளோரோசிஸ் நச்சு பொருள் நீரிலிருந்து நீக்கப்படும்.

தமிழ்நாட்டில் தரமற்ற நெடுஞ்சாலைகள்: வேலைவாய்ப்பு உருவாகும். பொருளாதார மேம்படும். வெளி மாவட்டத்திற்கு வேலைக்குச் சென்ற இளைஞர்கள் மீண்டும் வருவார்கள். திட்டத்தை செயல்படுத்தாமல் அரசு ஏன் மெத்தனமாக இருக்கிறது என்று புரியவில்லை. முதலமைச்சர் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டும். தருமபுரி சிப்காட்டில் தொழிற்சாலைகளை வரவைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சில நெடுஞ்சாலைகள் இன்னும் தரமாக இல்லை.

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகள் தரமற்ற நெடுஞ்சாலைகளாக அமைக்கப்பட்டு வருகிறது. வந்தவாசி நெடுஞ்சாலை உலக வங்கி நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. சில பகுதியில் தரமாகவும் சில பகுதிகளில் தரம் இல்லாமல் இருக்கிறது. தரம் இல்லாத தார் பயன்படுத்தப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் சாலைக்கு கீழ் தல சாலை (underpass road) அதிகமாக அமைக்க வேண்டும். இன்று காலையில் ஒரு விபத்து நடைபெற்றது.

காவிரி பிரச்சினை தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினை: சாலைகளில் மக்கள் கடந்து செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுகின்றன. தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 100 பேர் விபத்தால் உயிரிழக்கின்றனர். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திலும், நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி வலியுறுத்தி வருகிறோம். செயல்படுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு காலம் தாமதிப்பார்கள் என்று தெரியவில்லை.

காவிரி பிரச்சனை தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனை. தமிழ்நாட்டில் 22 மாவட்ட மக்கள் காவிரி தண்ணீரை குடித்து வருகின்றனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் காவிரி ஆற்றில் தான் உள்ளது. தற்பொழுது கர்நாடக தண்ணீர் வழங்க மறுக்கிறது. மேகதாது அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு கிடைக்காது. சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பேட்டியின் போது பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே மணி, தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:அரூரில் 53 நாட்களில் கதிர் விட்ட நெற்பயிர்கள்.. வயல்களில் ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள்!

ABOUT THE AUTHOR

...view details