தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி பகுதியில் சூதாட்டம் நடந்துவருவதாக அரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, சக்திவேல், கமலநாதன் கொண்ட தனிப்படை போலீசார் கோட்டப்பட்டி அருகே உள்ள பெரிய ஏரி பகுதியில் சோதனைக்கு சென்றனர்.
அப்போது, சூதாடி கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். மொத்தமாக 15 பேரை கைது செய்து கோட்டப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் இருந்து ரூ. 5,77,345 ரொக்க பணம், 2 கார்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் 21 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: தருமபுரியில் விவசாயம் செழிக்க காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - ஜி.கே.மணி
Last Updated :Dec 21, 2022, 2:56 PM IST