கடலூர்:கடலூர் அருகே தோட்டப்பட்டுவில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 10 தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், இந்த கொள்முதல் நிலையத்தில் பட்டறை போட்டு வைத்துள்ளனர்.
10க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம்(ஜூலை 4) கடலூரில் கனமழை கொட்டியது. 7.3 செ.மீ அளவு பதிவான மழையால், நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டறை போடப்பட்டிருந்த நெல்மணிகள் முளைத்து வீணாகும் நிலையில் உள்ளன.