தமிழ்நாடு

tamil nadu

பயணிகளிடம் தகாத வார்த்தையில் பேச்சு - ஓட்டுநர், நடத்துநரின் உரிமம் ரத்து! அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் தீர்வு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 6:11 PM IST

conductor temporary Suspension of license: கடலூரில் பயணிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் வீடியோ வைரலான நிலையில், அமைச்சரின் உத்தரவை அடுத்து இருவரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

conductor temporary Suspension of license
பயணிகளிடம் தகாத வார்த்தைகளைப் பேசிய ஓட்டுநர், நடத்துனர் வீடியோ வைரல் எதிரொலி

பயணிகளிடம் தகாத வார்த்தைகளைப் பேசிய ஓட்டுநர், நடத்துனர் வீடியோ வைரல் எதிரொலி

கடலூர்பேருந்து நிலையத்தில் இருந்து தினம்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறிஞ்சிப்பாடி, வடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச் சென்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று (நவ. 30) மாலை தனியார் பேருந்து ஒன்று விருத்தாச்சலம் செல்வதற்காக தயார் நிலையில் இருந்துள்ளது.

அப்போது தனியார் பேருந்தின் நடத்துனர், விருத்தாச்சலம் பகுதிக்கு மட்டும் பயணிகள் ஏற வேண்டும் எனக் கூறிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது குறிஞ்சிப்பாடிக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் ஏறுவதற்கு முயன்ற போது, நடத்துனர் தகாத முறையில் நடந்தும், தகாத வார்த்தையிலும் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

விருத்தாச்சலம் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சிப்பாடி என்ற இடத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ள நிலையில், ஏன் குறிஞ்சிப்பாடியில் பேருந்து நிற்காது? என பயணிகள் நடத்துனரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி, வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) அருணாச்சலம், இன்று (டிச. 1) காலை தனியார் பேருந்தை இயக்காமல் நிறுத்தினார். பின்னர், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். இது மட்டுமின்றி பொதுமக்களிடம் தகாத முறையிலும், தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறி ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் உரிமத்தை (license) தற்காலிகமாக ரத்து செய்தார்.

இதையும் படிங்க:சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தை திருமண விவகாரம் - அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ABOUT THE AUTHOR

...view details