கோயம்புத்தூர்மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரியின் கணவர் திராவிட மணி என்பவர் நேற்று (செப்.21) காலை 6 மணியளவில் சுகாதார அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, சுகாதார ஆய்வாளர் அமரும் இருக்கையில் அமர்ந்துகொண்டு அதிகார தோரணையில் சுகாதாரப் பணியாளர்களின் வருகைப்பதிவேட்டை எடுத்து ஆய்வு மேற்கொண்டார்.
சுகாதாரப்பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. பணியாளர்களை எந்தெந்த இடத்திற்கு நீங்கள் பணி செய்ய வேண்டும் என்றும்; யார் எந்த இடத்தில் பணிபுரிய இருக்கிறார்கள் எனத் தனக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.