தமிழ்நாடு

tamil nadu

பள்ளி மாணவி தற்கொலை: தலைமை ஆசிரியருக்கு பிணை வழங்க அரசு எதிர்ப்பு..

By

Published : Nov 24, 2021, 7:42 PM IST

கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை வழக்கில் தலைமையாசிரியர் பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆனால் பிணை வழங்க அரசு, பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு, ஆசிரியருக்கு ஜாமீன் கொடுக்க அரசு எதிர்ப்பு
கோவை பள்ளி மாணவி தற்கொலை

கோயம்புத்தூர்: கோவையைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 11ஆம் தேதி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி முன்பு படித்த பள்ளியின் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.இதனை மாணவி தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வரும் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து, ஆசிரியர் 12ஆம் தேதியும், பள்ளி முதல்வர் 14ஆம் தேதியும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை போக்சோ நீதிமன்றம்

இந்நிலையில் பள்ளி முதல்வர் பிணை கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு மீதான விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் இன்று (நவ.24) நடைபெற்றது. அப்போது பிணை வழங்க அரசு தரப்பிலும், மாணவியின் பெற்றோர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்ட்டது.

இதனால் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:15 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்.. 10 ஆண்டுகள் சிறையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details