தமிழ்நாடு

tamil nadu

கஞ்சா சாக்லேட் விற்றவர் கைது... பீகாரில் இருந்து கடத்தி தமிழகத்தில் விற்பனை!

By

Published : Feb 7, 2023, 8:36 AM IST

பீகாரில் இருந்து கஞ்சா சாக்லேட் கடத்தி கோவை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்த வடமாநில கடத்தல்காரரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

சாக்லேட் விற்றவர்
சாக்லேட் விற்றவர்

பீகாரில் இருந்து கஞ்சா சாக்லேட் கடத்தி தமிழகத்தில் விற்றவர் கைது

கோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் வட மாநில நபர்கள் மூலமாக கஞ்சா சாக்லேட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நேற்று (பிப்.6) உதவி காவல் ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த ஒரு நபரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை வாங்கி போலீசார் சோதனை செய்தனர். அதில் சாக்லேட் பாக்கெட்டுகளும் ஒரு பொட்டலமும் இருந்தது. அதை போலீசார் பிரித்துப் பார்த்தபோது, இரண்டரை கிலோ அளவுள்ள கஞ்சா கலந்த போதை சாக்லேட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிடிபட்டவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் சஹான் என்பவரின் மகன் மகேஷ் குமார்(37) என்பதும், பீகார் மாநிலத்தில் இருந்து கஞ்சா சாக்லேட் மொத்தமாக வாங்கி வந்து இப்பகுதியில் பணி புரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வருவதும் \ தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, பிடிபட்ட நபரிடம் இருந்த 21 கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் இரண்டரை கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கருமத்தம்பட்டி போலீசார் அந்த வட மாநில நபர் மீது வழக்குப்பதிவு செய்து சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவ்வாறு தமிழ்நாட்டிற்குள் வட மாநிலத்திலிருந்து கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் கடத்தி வந்து கோவை சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 அரியவகை குரங்கு குட்டிகள்!

ABOUT THE AUTHOR

...view details