தமிழ்நாடு

tamil nadu

ஆயுதங்களுடன் ரீல்ஸ் போட்ட கோவை தமன்னா... திருந்தி வாழ்வதாக புதிய வீடியோ வெளியீடு.

By

Published : Mar 13, 2023, 7:46 PM IST

கையில் ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் தற்போது இது குறித்து புதிய வீடியோ ஒன்றை அப்பெண் வெளியிட்டுள்ளார்.

Etv Bharat இன்ஸ்டாகிராம் தமன்னா
Etv Bharat இன்ஸ்டாகிராம் தமன்னா

இன்ஸ்டாகிராம் தமன்னா

கோயம்புத்தூர்:கையில் ஆயுதங்களுடன், கையில் சிகரெட்டுடன் ரவுடி தொனியில் தனது நண்பர்களுடன் வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இளம்பெண்ணை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது அப்பெண் தான் திருந்து கணவருடன் வாழ்ந்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாநகரில் கடந்த மாதம் நிகழ்ந்த இருவேறு கொலை சம்பவங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கோயம்புத்தூர் மாநகர காவல் துறையினர் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், சிலர் தாமாக முன்வந்து சரணடைந்தனர்.

அதே சமயம் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி கோவை மாநகரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும், சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களைக் கொண்டு வீடியோ பதிவிடும் நபர்கள் குறித்தும் கண்காணிக்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் கோவை மாநகரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களை கொண்டு மக்களை மிரட்டுகின்ற தொணியில் வீடியோ பதிவேற்றம் செய்த சுமார் 30க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக கோவையில் வசித்து வந்த இளம்பெண் தமன்னா என்ற வினோதினி கையில் ஆயுதங்களுடன், வாயில் சிகரெட்டுடன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

இதனை அறிந்த கோவை மாநகர காவல் துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி அந்த இளம்பெண்ணை தேடி வந்தனர். இதனையறிந்த தமன்னா தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமன்னா தன்னுடைய வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "பட்டா கத்தியுடன் இருக்கும் வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது. தற்போது இது மாதிரியான வீடியோக்கள் எதுவும் நான் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே கஞ்சா வழக்கில் உள்ளே சென்று வந்துள்ளேன். தற்போது எனக்கு திருமணமாகி ஆறு மாத கர்ப்பிணியாக எனது கணவருடன் வாழ்ந்து வருகிறேன்.

எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை காவல் துறையினர் பிடித்து வைத்துக் கொண்டு நான் வந்தால் தான் விடுவதாக கூறி அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சமூக வலைதலங்களில் பரவிய வீடியோக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது.

அந்த வீடியோக்களையும் தற்போது நான் இருக்கும் முகத்தினை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். நான் தற்போது எந்த ஒரு வீடியோக்களும் பதிவேற்றம் செய்யவில்லை. எனது வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்தால் உங்களுக்கு தெரியும். நான் செய்த தவறுகளை மறந்து எனது கணவருடன் வாழ்ந்து வருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஹவுஸ் ஓனரை கொலை செய்துவிட்டு ரூ.3.5 லட்சம் கொள்ளை.. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details