தமிழ்நாடு

tamil nadu

திருமணத்தை மீறிய உறவு: இடையூராக இருந்த கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி!

By

Published : Jun 19, 2021, 3:54 PM IST

சென்னையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவியை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருமணத்தை மீறிய உறவு
திருமணத்தை மீறிய உறவு

சென்னை:சைதாப்பேட்டை ஜெயராமன் தெருவில் இன்டீரியர் டெகரேஷன் தொழில் செய்து வருபவர் கோதண்டபாணி (36). இவருக்கு நிரோஷா (30) என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்கள், முன்னதாக கோடம்பாக்கத்தில் வசித்து வந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த டெய்லர் மணிகண்டன் (30) என்பவருடன், நிரோஷாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு சமயம் வீட்டில் இருவரும் தனிமையில் இருந்தபோது, வீட்டின் உரிமையாளர் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, நிரோசாவின் கணவருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

கோதண்டபாணி-நிரோஷா

இதையடுத்து கோதண்டபாணி, மணிகண்டன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர், அந்த தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், இரு பெண் குழந்தைகளின் நலன் கருதி அவர்களது உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, இருவரும் சைதாப்பேட்டையில் குடியேறி வாழந்து வந்தனர். கணவர் கோதண்டபானி தொழில் காரணமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடும் காரணத்தால் சைதாப்பேட்டையிலும் நிரோசா, மணிகண்டனின் உறவு தொடர்ந்துள்ளது.

கணவரை கொலை செய்த மனைவி

கோதண்டபாணியை தீர்த்துக்கட்ட முடிவு செய்த மணிகண்டன்:

இதனையறிந்த கோதண்டபாணி மீண்டும் தனது மனைவியையும், மணிகண்டனையும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஜுன் 19) அதிகாலை சைதாப்பேட்டையிலுள்ள கோதண்டபாணி வீட்டிற்கு வந்த டெய்லர் மணிகண்டன், இரண்டாவது மாடியிலிருந்த கோதண்டபாணியை கழுத்து பகுதியில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் துடித்த கோதண்டபாணி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை காவல் துறையினர், கோதண்டபாணியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை, நிரோஷாவும், மணிகண்டனும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. நிரோஷாவை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தலையில் கல்லை போட்டு கொலை: காசநோய் மருத்துவமனையில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details