தமிழ்நாடு

tamil nadu

உதயநிதியின் மண் பிள்ளையார் ட்வீட்: இது திமுகவில் முதல்முறை!

By

Published : Aug 24, 2020, 8:46 AM IST

Updated : Aug 24, 2020, 10:27 AM IST

சென்னை: திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் மண் பிள்ளையாரைப் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி
உதயநிதி

கடந்த 22ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்துக்கள் பிள்ளையார் செய்து வழிபட்டனர். தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், திமுக தரப்பிலிருந்து வாழ்த்து வரவில்லை என்று இந்துக்கள் வருத்தம் அடைந்தனர்.

இந்த நிலையில், திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் மண் பிள்ளையாரை ஒருவர் கையில் வைத்திருப்பது போன்று புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

திமுக முக்கியப் பொறுப்பு வகிக்கும் ஒருவர் பிள்ளையார் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவுசெய்வது இதுவே முதல்முறை.

திமுக தலைவர் ஸ்டாலின் பொருளாளராக இருந்தபோது 2014இல் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து அதற்கு மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

தற்போது திமுகவிற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு பரப்புரைகள் (இந்துக்களுக்கு எதிரான கட்சி உள்ளிட்ட குற்றச்சாட்டு) செய்யப்பட்டுவரும் நிலையில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பதிவு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்தாகக் கருதப்படுகின்றது.

இதையும் படிங்க:'ஸ்டாலின் விநாயகரை வழிபட வேண்டும்’

Last Updated :Aug 24, 2020, 10:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details